Recent Video

Showing posts with label news. Show all posts

சென்னை அருகே மையம் கொண்டுள்ள ”நிலம்” புயல்..





அக்டோபர் 31: வங்கக் கடலில் மையம் கொண்டு தமிழகக் கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலம் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ தொலைவில் நகர்ந்து வருகிறது.சென்னை நகரில் முன்னெச்சரிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது. நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் சென்னை நகரில் பலத்த காற்று வீசிவருகிறது,
புயல் இப்போது எங்கே இருக்கிறது?
நிலம் புயல் தற்போது நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அருகே கடலில் மையம் கொண்டிருக்கிறது. இது நகர்ந்து சென்னைக்கு மிக அருகே கரையைக் கடக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு புயல் பயணித்த திசையை வைத்து கடலுர்- நெல்லூர் இடையே கரையைக் கடக்கலாம் என்று கூறப்பட்டது.
8-ம் எண் புயல் கூண்டு
சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதுடன் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இன்று மாலைக்குள் புதுச்சேரி- நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கென எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
மின்சாரம் துண்டிப்பு
நிலம் புயலால் சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் உஷாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது,

நண்பர்களே. . . .

நம் உயிரிலும் மேலாக...நாம் நேசிக்க கூடிய நமது உத்தம இறைதூதரையும்..நமது மார்க்கத்தையும் கொச்சை படுத்திய திரைபடத்தை தடை விதிக்காத யூத நாயின் இருப்பிடமான அமெரிக்காவிற்க்கு எதிராக போரட்டம் நடத்தினால் மட்டும் போதாது..ஒவ்வொறு முஸ்லிமும் அமெரிக்காவிலுருந்து தயாரிக்க கூடிய அனைத்து பொருட்களை வாங்குவதை தவிற்க்க வேண்டும்..நாம் நண்பர்களுக்கும் இதை தெரிய படுத்துவோம்..பெரும்பாலும் நம் மக்கள் தான் அதிக அள்வில் அமெரிக்கவின் தாயரிப்பான KFC ,PEPSI, KOLA,7UP. .இன்னும் மற்ற பொருட்க்ளையும் வாங்குவதை பார்க முடிகிறது..அல்லாஹ்விற்க்காக அந்த அமெரிக்க நாயின் தாயரிப்புகளை வாங்க மாட்டோம் என் உறுதி கொள்வேம்..நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிய படுத்துவோம்....இன்ஷா அல்லாஹ்...

நபி (ஸல்) நாயகத்தை தரைகுறைவாக விமர்சித்த அமெரிக்க நாய்களை கண்டித்து அதிரையில் நடந்த பேரணி ஆர்ப்பாட்டம்



அமெரிக்காவை கண்டித்து அதிரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்









அதிரையில் அமெரிக்காவை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர் ! 
நபிகள் நாயகம் (ஸல் )அவர்களை காமுகராகவும், தீவிரவாதியாகவும் சித்தரித்து திரைப்படம் எடுத்துள்ள அமெரிக்க பாதிரியையும் ,அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக பிரம்மாண்டமான பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது






தக்வா பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y.அன்வர் அலி அவர்கள் துவக்கிவைத்தார்.


அதிரை கிளை தலைவர் பீர்முகம்மது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் எப்போதும் இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டனர் .அதிரை வரலாற்றில் இது ஒரு மைல்கல் !.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சகோதரர் யாசர் அரஃபாத் இம்தாதி அவர்களும் ,தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரஃப் தீன் ஃபிர்தவ்சி அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள் .தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அதிரை ஸாலிஹ் அவர்கள் நன்றி உரையாற்றினார்கள் .
 
இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியுடன் முடித்து தந்த வல்ல ரஹ்மானுக்கு புகழனைத்தும் ! அல்ஹம்துலில்லாஹ்






































திரைப்படம் மூலம் குழப்பம் உண்டாக்கும் யூதர்கள்!


      முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிக மோசமாக அவமதிக்கும் திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும் யூதன் ஒருவனால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் வெளிவராத இந்த படத்தின் ட்ரைலர் யூட் டுயுப்யில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் இதற்க்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.



தமிழகத்தில் SDPI கட்சி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்கீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த இஸ்லாம் எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்தவருடன் தொடர்பு கொண்டிருந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவரிடம் FBI போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

 
இந்நிலையில் அமெரிக்க கலிபோர்னிய மாநில தலைநகர் சாக்கரமேண்டோவில் அமைந்துள்ள மஸ்ஜித் நூர் பள்ளியில் நேற்று வெளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது இம்மாம் கூறியாதாவது. இந்த திரைப்படத்தின் மூலம் டெவில் (DEVIL) எதை செய்ய நாடியதோ அதை செய்துவிட்டது. முஸ்லிம்கள் உணர்ச்சி வயப்பட்டு லிபியாவில் உள்ள அமெரிக்க தூதர் உட்பட 3பேரை கொன்றதை இஸ்லாம் அனுமதிக்க வில்லை, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

இது போன்று விசயங்களில் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்றார். இதை எதிர்த்து அமெரிக்கா தழுவிய பிரச்சாரத்தையும், சட்ட ரீதியான நடவடிக்கையையும் தாங்கள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க உலகின் கிரீன் லேன்ட், இங்கே அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர். உலகின் சுதந்திர பூமி என்று அமெரிக்காவை சொல்லலாம் என்றார். இதனால் முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வன்மையாக கண்டித்தார்.

ஏன்? தனி தமிழ் நாடு அமைய வேண்டும்!

 நீண்ட நெடும் காலமாக வட இந்திய அரசியல் சக்திகளால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இது ஹிந்தி திணிப்பில் தொடங்கி, இலங்கை பயங்கரவாத அரசால் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் கூடங்குளத்தில் முடிந்திருக்கிறது. 
கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் கொக்க கோலா குளிர்பானம் தாயரிப்பு, இவைக்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் கேரளாவாகும். கேரளாவில் அனைத்து கட்சிகள், மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் அவை தமிழகத்தை நோக்கி தள்ளிவிடப்பட்டன. 

கூடங்குளத்தில் காவல்துறை நடத்திய வெறியாட்டத்தின் போது, பெண்களை மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகளை கொண்டு திட்டி, பெண்களின் பிறப்புறுப்பில் லத்தியால் குத்தியுள்ளனர். அது மட்டுமல்லாது பெண்களில் சேலையை உருவி அவமானப்படுத்தியுள்ளனர். சிறுவர்களையும், முதியவர்களையும் கடுமையாக தாக்கி காயம் உண்டாக்கியுள்ளனர்
வலது பக்கம் உள்ள விடியோவை பார்க்கவும்.

இதுமட்டுமல்லாது கூடங்குளம் பஞ்சாயத்து அலுவுலகத்தையும், டாஸ்மார் கடையையும் போலீசாரே உடைத்து விட்டு, அதை பொதுமக்கள் தலையில் போட்டுள்ளனர். மேலும் கூடங்குளம் மக்களின் வாகனங்களையும், வீடுகளையும், கடைகளையும் காவல் துறையினர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். சொந்த மக்களை அழித்தொழிக்கும் இந்திய அரசோடு தமிழர்கள் சேர்ந்திருக்க வேண்டுமா? 

இலங்கை அரசால் இதுவரை கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 500 தாண்டுகிறது. இந்த செயல் ஒருநாட்டின் மீது போர்தொடுப்பதற்கு சமம். இதே சம்பவம், கேரளா மாநிலத்தவர்களுக்கோ, கர்நாடக மாநிலத்தவர்களுக்கோ நடந்திருந்தால் இந்திய அரசால் மவுனம் காக்க முடியுமா? இல்லை அவர்கள்தான் சும்மா இருப்பார்களா! 

எங்களிடம் வலிமையான கடல்படை இருக்கிறது, என்று உலக அளவில் பீற்றி திரியும் இந்தியாவின் கடல்படை, தமிழர்கள் விசயத்தில் எங்கே போனது? ஒருபேச்சிக்கு அமெரிக்காவுக்கு அருகே இலங்கை இருந்திருக்குமேயானால் ஒரு அமெரிக்க குடிமகனை தொட்டிருந்தால் அமெரிக்க கடல்படை என்ன செய்யும்! யோசித்து பாருங்கள்!. 

இலங்கை கடல்படையை, நாய்களை அடித்து துரத்துவது போல் துரத்தி இருப்பார்கள். தமிழர்களில் சில அப்பாவிகள் நாம வல்லரசாகனும், அணுஉலை இருந்தால்தான் வல்லரசு, இலங்கை போன்ற அந்நிய நாடுகளின் விசயத்தில் தலையிட்டால்தான் நாம் வல்லரசு என்று நினைக்கிறார்கள். ஒருநாடு தனது நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்காத நிலையில் அதை வல்லரசாக கருத முடியாது. 

காவேரி நடுவர் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை இதுவரை கர்நாடகா மதித்ததே இல்லை. *இதே காவிரி தமிழ் நாட்டில் இருந்து* நாம் கர்நாடகாவிற்கு தண்ணீர் தர மறுத்தோம் என்றால் இந்தியாவின் மொத்த ராணுவமும் இங்கேதான் குவிக்கப்பட்டு இருக்கும். அந்த தண்ணீரை (இப்போது மின்சாரத்தை பகிர்வது போல்) மற்ற எல்லா மாநிலங்களுக்கும் கொடுத்துவிட்டு மீதத்தைதான் நமக்கு கொடுப்பார்கள்.

இன்றும் தமிழகத்தில் உள்ள அரசு சார்ந்த கோப்புகள் எல்லாம் ஆங்கிலம், மற்றும் ஹிந்தியிலேயே உள்ளது. இனப்படுகொலைகள் நடந்த இலங்கையில் கூட திரும்பிய பகுதிகள் எல்லாம் சிங்களம், ஆங்கிலம், தமிழ் என்று மும்மொழிகளும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இங்கே தமிழ் நாட்டில் தமிழில் கோப்புகள் இல்லை. ஆங்கிலமும், ஹிந்தியிலும் மட்டுமே உள்ளன. 

இது போதாதென்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அனுமதி கொடுக்கப்படாத தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தேனி மாவட்டத்தில் உள்ள நியூட்ரினோ ஆய்வகம் போன்ற அழிவு சக்திகள் அனைத்தையும் தமிழகத்தை நோக்கி தள்ளிவிடுகிறார்கள். ஒரு கல்பாக்கம் தமிழ் நாட்டுக்கு போதுமானது மீண்டும் இதுபோன்ற அணு உலைகள் தேவையில்லை. 

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழர்களுக்கு போதுமானது. தமிழகம் ஒன்றும் பன்னாட்டு நிறுவனங்களின் குப்பை கூடை இல்லை. நமது வளங்களையும், இயற்கையையும் அழிக்கும் விசயங்களை வன்மையாக எதிர்ப்போம். நாம் தமிழர் என்று சொல்வோம். நீண்ட நெடிய வரலாற்று கொண்ட தமிழனுக்கு என்று ஒரு நாடு. தனி தமிழ் நாட்டின் சுதந்திர காற்றை சுவாசிக்க ஒவ்வொரு தமிழனும் தயாராக வேண்டும்.

வெள்ளையனுக்கு எதிராக ஒரு சுதந்திர போராட்டம் நடத்தப்பட்டது. அதுபோல் தமிழகத்தை மீட்க்க மீண்டும் காந்திய வழியில் ஒரு சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு நமது முழு ஆதரவை தெரிவிப்போம். இந்தியா என்கிற வல்லாதிக்க வடஇந்திய ஆட்சியோடு நாம் ஏன் ஒட்டி கிடக்க வேண்டும். சிந்திப்போம். 


கூடங்குளம் மற்றும் இடிந்த கரை மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று mptstar.blogspot.in
இணையத்தளம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

தொடரும் மக்கள் போராட்டம்! அரசு பயங்கரவாததிற்கு சாட்டையடி!


அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் கூடங்குளம் மக்கள் மீது அரசு பயங்கரவாததின் ஏவல் நாய்களான போலீஸ்,  கொடிய  தாக்குதல்களை  மேற்கொண்டு உள்ளது. இதை சிந்திக்கவும் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கிறது. 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை பயங்கரவாத அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன.
இந்திய பயங்கரவாத அரசு, ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தீவிரவாத வன்முறை தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அமைதியான வழியில் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் மீது தமிழக காவல்துறை கொடூரமாக தடியடி மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் போராடிய மக்கள் மீது போலீஸ் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்தோணி ஜார்ஜ் மீனவர் கொல்லப்பட்டார்.  இதனால் மணப்பாடு, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் அமளிநகர்,  உவரி, பெரியதாழை, ஆழன்தலை, கூடுதாழை, கூட்டப்பனை,   உள்ளிட்ட மீனவ கிராமங்கள் பதற்றத்தில் உள்ளன. 

அரசியல் கட்சிகள் கண்டனம்:  1). பாட்டாளி மக்கள் கட்சி: கூடங்குளம் தடியடியை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் நாளை (11.09.2012) போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
2) SDPI கட்சி: இக்கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடன்குளத்தில் போலிசால் நடத்தப்படும் அக்கிரமங்களை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்க்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
3). தமிழக வாழ்வுரிமைக் கட்சி: இக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக அமைதி வழியில் போராடி வந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகள் வீசி, துப்பாக்கிச் சூட்டை நடத்திய காவல்துறையின் செயல் கண்டனத்துக் குரியது என்று தெரிவித்துள்ளார்.
4). ஊழலுக்கு எதிரான அமைப்பு மற்றும் அன்னா ஹசாரே குழு கண்டனம்: கூடங்குளம் அணு உலை பகுதியில் போலீஸ்சால் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களுக்கு அன்னா ஹசாரே குழு மற்றும்  ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பினை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த மூத்த வழக்கரிஞ்சரான பிரசாத் புஷன் கூறியதாவது, இது மத்திய, மாநில அரசுகளின் சகிப்பற்ற தன்மையையே காட்டுகிறது. இது தொடர்பான ஐகோர்‌ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
5). மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன்: கூடங்குளத்தில் அமைதியாக போராடிய மக்கள் மீது மிகக்கொடுமையான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு சட்டம் அங்கீகரித்துள்ளது. சட்டத்தை மதிக்காமல் தடியடி நடத்திய காவல்துறைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்.
6). தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர் மீது போலிஸ் தடியடி நடத்தியுள்ள சம்பவம் முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். பாமர மக்கள் கூடியிருந்த இடத்தில் எடுத்த உடனேயே கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது என்பது அந்த மக்களை அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
7). நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழக அரசின் இந்த காட்டுமிராண்டி தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கள் அரசியலை தாங்களே நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்கள் உருவாகி தமிழர் அரசை நிறுவவேண்டும்.. கூடங்குளம் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். அவர்களின் மீது அடக்குறை ஏவிவிட்ட இந்த இக்கட்டான கட்டத்திலும் அவர்களின் போராட்டத்திற்கு உறுதியாக துணை நிற்ப்போம்.

8). விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: அறவழியில் போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் தமிழக அரசு காவல்துறையை ஏவி அவர்களை மிரட்டுவதும், தாக்குவதும் கடுமையான கண்டனத்துக்குரியது. இதுவரை கூடங்குளம் அணு உலையைப் பார்வையிட வந்த அரசு இயந்திரத்தைச் சார்ந்த எவரும் மக்களைச் சந்தித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


9) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில்: கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின்நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை தாக்குதல்கள் ஆகியவற்றை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என்று அதன் தமிழக தலைவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். மேலும் அணுமின் சக்தி ஆபத்தானது என்ற கொள்கையில் தங்கள் இயக்கம்உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

10) மனித நேய மக்கள் கட்சி (ம.ம.க): கூடங்குளத்தில் இன்று காலை காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, பத்திரிக்கையாளர்களையும் தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தொண்டர்கள், மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.


11). மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஒரே இடத்தில், ஓராண்டுக்கும் மேலாக, அறவழியில் போராட்டம் நடந்த வரலாறு, இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை. சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து, அம்மக்கள் போராடி வருகின்றனர். இந்த அமைதிவழி போராட்டத்தை தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை வீசி தாக்கியதோடு, கூடங்குளத்தில் தெருவில் போவோர் வருவோரையெல்லாம், போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். கடற்கரை நகரங்களில் பெரும் பதற்றம் ஏற்படுவதற்கு காவல்துறையின் நடவடிக்கைகளே முழுக்காரணம். இதற்க்கு மதிமுக சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. அப்பகுதி வாழ் மக்கள் மீது போடப்பட்டு உள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.


கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு குவியும் ஆதரவு: கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு தமிழகம் மட்டும் அல்லாது தேசிய அளவிலும் ஆதரவு அதிகரித்துள்ளது. அன்னா ஹசாரே குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஐகோர்‌ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் போராட்டத்திற்கு ஆரவாக கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வங்க கடலோரம் பதட்டம் நிலவுகிறது.
கேரளா மாநிலத்தின் எதிர்க்க கட்சி தலைவர் சச்சிதானந்தம் (கம்யூனிஸ்ட்) கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் கூடங்குளத்திற்கு நேரில் விஜயம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். தமிழக போலி கம்யூனிஸ்ட்கள் கூடங்குளம் அணு மின்நிலைய போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில் கேரளா கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பது இங்கே கவனிக்க தக்க விடயமாகும்.
கூடங்குளம் போராட்டத்திற்கு எதிப்பு: கூடங்குளம் மக்கள் போராட்டத்தகு எதிர்ப்பு: தினமலர் ( தினமலம்) நாளிதழ் வழக்கம் போல் உதயகுமார் ஓட்டம் என்று செய்தி போட்டு தன் மதவாத அரிப்பை தீர்த்து கொண்டது. தமிழகத்தின் கையாலாகாத முதல்வர் ஜெயா போலீஸ்சாரின் செயலை ஆதரித்து போராட்டகாரர்களின் மாயவலையில் விழவேண்டாம் என்று கேட்டு கொண்டார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் போலீஸ் போலீஸ் அராஜகத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார்.

மக்கள் தலைவர் உதயகுமார் கைதாக விருப்பம்: கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் பதற்றத்தை தனிக்க நான் (உதயகுமார்), ஜேசுராஜன், புஷ்பராயன், முகிலன் ஆகியோர் இரவு 9 மணி அளவில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் கூடங்குளம் காவல்நிலையத்தில் கைதாக விரும்புகிறோம். இதனால் நாங்கள் தோற்றுவிட்டதாக கருத முடியாது. அறவழியில் எங்கள் போராட்டம் தொடரும். மேலும் பதற்ற சூழ்நிலையை தனிக்கவே நாங்கள் கைதாக விரும்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.


அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்று mptstar.blogspot.in இணையத்தளம் சார்பாக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

சென்னையில் பரவலான மழை: 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு


சூப்பர் மழை... 4 மணிக்கு ஆரம்பித்து 5 மணி வரை வெளுத்த பேய் மழை..சென்னையில் வெள்ளக்காடு!

சென்னை: சென்னையில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. காற்று இல்லை, இடி மின்னல் இல்லை... இதெல்லாம் இல்லாமல் படு அழகாக பெய்த அந்த பேய் மழையால் நகரின் பல பகுதிகள் குறிப்பாக புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாகி விட்டன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி வாகனப் போக்குவரத்து வெகுவாக தடைபட்டது.

சென்னையில் கடந்த சில தினங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. பகல் முழுக்க வாட்டி வதைக்கும் வெயில், இரவில் கொஞ்ச நேரம் மழை என்று ரேஞ்சில் இருந்து வந்த நிலையில் இன்று மாலை கன மழை புரட்டிப் போட்டு விட்டது.

மாலை 4 மணியளவில் லேசாக ஆரம்பித்த இந்த மழை போகப் போக வெளுத்து வாங்கியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த இந்த கன மழையால் சென்னை நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்தன. குறிப்பாக புறநகர்ப் பகுதிகள் முடங்கிப் போயின.

பள்ளி கல்லூரிகளை விட்டு வந்த மாணவர்கள், வேலை பார்த்து திரும்புவோர் என சகலரும் மழையில் சிக்கிக் கொண்டனர். தாம்பரம், ஆவடி, மேடவாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் மழை பலமாக பெய்து தீர்த்தது.

இடி மின்னல், காற்று அவ்வளவாக இல்லாததால் மழை விடாமல் பெய்ததது. இந்த கன மழையால் முக்கியச் சாலைகளில் நீர் வெள்ளம் போல ஓடியது.

இப்படி டெய்லி ஒருவாட்டி மழை பெஞ்சா போதுமே, தண்ணிக்கு அல்லாட வேண்டியிருக்காதே என்று மகிழ்ச்சியோடு சொன்னார், குரோம்பேட்டை பகுதியில் கன மழைக்கு ஒரு மெக்கானிக் ஷாப்பில் தஞ்சம் புகுந்திருந்த பெரியவர்!.




ரசிகர்களின் அமோக வரவேற்பில் மாற்றான் டிரைலர்!!


சூர்யா ஒட்டி பிறந்த இரட்டையர்களாக நடித்துள்ள மாற்றான் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் கே.வி. ஆனந்தின் இந்த முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்பதில் ஐயமில்லை.
இதுவரைக்கும் வெளியான ஜீன்ஸ், மிஸ்டர் ரோமியோ, வாலி போன்ற படங்களில் இரட்டை சகோதரர்கள் வேடம் பெரிதும் வரவேற்பை பெற்றது. இதில் மாற்றான் சற்று வித்தியாசப்படுகிறது.
ஒட்டி பிறந்த இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையை கே.வி.ஆனந்த் தனது பாணியில் சொல்லியிருக்கின்றார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் மற்றொரு தகவல் ஒன்றும் உள்ளது.

அதாவது, கடந்த 2003ம் ஆண்டு stuck on you என்ற இரட்டை சகோதரர்கள் நடித்த இப்படத்தை மையமாக வைத்தே மாற்றான் எடுக்கப்பட்டிருக்கலாம்.
அதில் வரும் சகோதரர்களும் மாற்றானில் வரும் சகோதரர்கள் போலவே ஒட்டியவர்கள். இப்படம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் 9 வருடங்களுக்கு பின்பு மாற்றான் தமிழ் திரை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது.

ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்தது எப்படி?


ஆர்டிஓ அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையே சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று வழக்காக எடுத்துக் கொண்டது. இன்று காலை நீதிமன்றம் கூடியதும் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்சி அளித்தார்கள். யார் இதைக் கொடுத்தது. இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு நாளைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
தெரிவித்தார். 20 நா்களுக்கு முன்புதான் அஏநுமதி தந்துள்ளார்கள் என்று கூறிய நீதிபதி, எப்படி கொடுத்தனர் என்று கேட்டார். பொறுப்பான அனைவரும் நாளை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் தர உத்தரவிட்டார்.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் யார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் கமுக்கமாக உள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் உயர்நீதிமன்றமே இதை தானாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்கூல் பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலி சேலையூர் பள்ளி முதல்வர் கைது


ஸ்கூல் பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலி சேலையூர் பள்ளி முதல்வர் கைது



தாம்பரம்: பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலியானது தொடர்பாக தாம்பரம் பள்ளி முதல்வர், பஸ் உரிமையாளர், டிரைவர், கிளீனர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் விடிய விடிய போலீசாரும் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர் சேதுமாதவன் (32), ஆட்டோ டிரைவர். மனைவி பிரியா (28). இவர்களது மகன் பிரணவ் (9), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். மகள் ஸ்ருதி (6), சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை வகுப்பு முடிந்ததும் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பள்ளி பஸ்சில் 60 மாணவர்கள் இருந்தனர்.
முடிச்சூர் இ.பி. காலனி பஸ் நிறுத்தம் அருகே பஸ் வேகமாக திரும்பியபோது, நிலைதடுமாறிய சிறுமி ஸ்ருதி, இருக்கைக்கு கீழ் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். அதுகூட தெரியாமல் டிரைவர், பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார். ஸ்ருதி விழுந்ததும் சக மாணவிகள் அலறினர். சாலையில் சென்றவர்கள், பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். டிரைவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் மாணவர்களை இறக்கிவிட்டு, பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் படைப்பையை சேர்ந்த சீமானை (58) கைது செய்தனர். பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன் (30), பள்ளி முதல்வர் விஜயன் (60), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடிய விடிய விசாரித்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதிகாலை 3.30 மணியளவில் அனைவரையும் கைது செய்தனர்.

மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி, இணை இயக்குநர் கார்மேகம், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழ்மணி ஆகியோரும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். ‘விசாரணை அறிக்கையை முதல்வருக்கு அனுப்புவோம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று பள்ளிக் கல்வி துறை செயலர் சபீதா தெரிவித்தார். மாணவி பலியானதை தொடர்ந்து சீயோன் பள்ளி நிர்வாகம் நடத்தி வரும் 4 பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பஸ்சில் இருந்து விழுந்து மாணவி இறந்தது குறித்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி திறந்தவுடன் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை செய்யப்படுகிறது. குறை ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அளிக்கப்படும் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்படும். விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் பர்மிட் ரத்து செய்யப்படும்’ என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
பள்ளி பஸ்சில் ஓட்டை இருப்பது தெரிந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். கடந்த வாரம் இதே ஓட்டையில் மாணவி ஸ்ருதியின் கால் சிக்கியுள்ளது. அப்போது அதிர்ஷ்டவமாக தப்பிய சிறுமி, இதுபற்றி தந்தையிடம் கூறியுள்ளார். அவரும் பஸ்சில் உள்ள ஓட்டையை அடைக்கும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். டிரைவர் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், அநியாயமாக ஒரு சிறுமியின் உயிர் போயிருக்காது. அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடைகள் அடைப்பு பள்ளி சிறுமி இறந்ததையடுத்து முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.
ஐகோர்ட் கடும் கண்டனம்

பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான சம்பவத்துக்கு ஐகோர்ட் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் இன்று காலை கோர்ட்டுக்கு வந்ததும், அரசு வக்கீல் வெங்கடேஷை பார்த்து, ‘சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி, பஸ் ஓட்டையில் விழுந்து இறந்தது மிகவும் சோகமானது; வேதனையானது. நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இதுபோன்ற பஸ்கள் இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. அட்வகேட் ஜெனரல் எங்கே இருக்கிறார்? அவர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதுதவிர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ராகிங் கொடுமையால் துயர சம்பவம்?


ராகிங் கொடுமையால் துயர சம்பவம்?


ஹைதராபாத்,july,24: ஆந்திர பிரதேச மாநிலத்தில் சீனியர் மாணவிகளின் ராகிங்கால் மாணவிக்கு பேசும் சக்தி இழக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் ஒன் மாணவியான ஷியாமிலுக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் காயத்ரி ஜூனியர் கல்லூரி ஹாஸ்டலில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின்சாரம் தடைப்பட்ட வேளையில் மாணவியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த சீனியர் மாணவிகள் அவரை தாக்கியுள்ளனர். நைலான் கயிற்றால் மாணவியின் கழுத்தை நெரித்து மூச்சுத்திணற வைத்துள்ளனர். இதனால் அவர் பேசும் சக்தியை இழந்துள்ளார்.
எத்தனை சட்டம் கொண்டுவந்து என்ன பயன்.  மாணவர்கள் நீங்கள் திருந்தாவிடில்

மியன்மாரில் கொடூரமாக கொன்றொழிக்கப்படும் முஸ்லிம்கள்.


ஜுலை 21: ஆரம்பத்தில் இந்திய பெருநிலப்பரப்பில் ஒரு பகுதியாக இருந்து பின்பு பிரிந்து சென்ற ஓரு தென்கிழக்காசிய நாடே பர்மாவாகும். இது 1989ல் ‘ஐக்கிய மியன்மார்’ என தன்பெயரை மாற்றிக் கொண்டது. இந்நாடு நமது இலங்கை நாட்டைக் காட்டிலும் சரியாக ஒருமாதத்திற்கு முன்னர் 1948 ஜனவரி மாதம் 4ஆம் திகதி பிருத்தானியாவிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.

மியன்மாரில் இருக்கும் 54 மில்லியென் சனத்தொகையில் 8.1 மில்லியன் மக்கள் முஸ்லிம்களாகும். அதாவது மொத்த சனத் தொகையில் 15 வீதமானோர் ஈமானை சுமந்தவர்களாகும். இந்தவகையில் தேரோவாத பௌத்தத்தை சேர்ந்த பெரும்பான்மை மக்கள் மத்தியில் இரண்டாவது சமயப்பிரிவினராக முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நாட்டில் முக்கிய நகரங்கள் தோறும் முஸ்லிம்கள்; உள்ளனர். பிராந்திய ரீதியாக பார்க்கின்றபோது மேற்கு மியன்மாரில் அரக்கான் (யுசயமயn) பிராந்தியமே முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தின் விஸ்தீரணம் 32,180 சதுர கலோ மீற்றராகும். இதில் 75 வீதத்திற்கு மேல் முஸ்லிம் மக்கள் உள்ளனர்.( இப்பிராந்தியமே தற்போது செந்நிறமாக மாறி வருகின்றது)
மியன்மார் சுதந்திரம் அடைவதற்கு முந்திய நிலைமையைக் காட்டிலும் சுதந்திரத்திற்கு பின்பே முஸ்லிம்களுக்கெதிரான துவச விதைகள் நடெங்கும் பாரியளவில் விதைக்கப்பட்டன. அவை பென்னம் பெரிய விருட்சங்களாக இன்று வளர்ந்தோங்கி விட்டன. இதனால் ஒரு காலத்தில் கீழத்தேய நாடுகளின் அரிசிக்கிண்ணமாக பார்க்கப்பட்ட மியன்மார் தற்போது முஸ்லிம்களுக்கான வதைகூடமாக பரிணமித்திருக்கின்றது.
(இக்கட்டுரை சுருக்கமாக எழுதப்படுவதால் சுதந்திரத்திற்கு முந்திய நிலைமைகள் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.)
இலங்கை முஸ்லிம்களைப் போலவே மியன்மார் முஸ்லிம்களில் அனேகர் அரபிய வம்ச வழிவந்தவர்களாகும். எட்டாம் நூற்றாண்டில் ஓர் நாள் மியன்மாருக்கு அண்மையாக கப்பலில் பயணித்த அரபியர் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் பயணத்தைத் தொடரமுடியாது மியன்மாரில் கால் பதித்தனர்.(ஏழாம் நூற்றாண்டில் ஆரம்ப காலத்தில் மியன்மாரில் அரபியரின் தொடர்பு இருந்ததாக சிலர் கூறுகின்றனர்) அன்றிலிருந்து அரபியர்களுக்கும் இந்நாட்டிற்குமிடையிலான தொடர்பு நீண்டது. அரபியர்கள் அந்நாட்டின் பூர்வீகக் குடிகளாயிருந்த பர்மிய பெண்களை ‘நிகாஹ்’ செய்தனர். அதன் மூலம் முஸ்லிம் குடிபெருக்கம் ஏற்பட்டது.

அரபியர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகவும் செல்வந்தர்களாகவும் இருந்ததும் அவர்கள் பர்மிய பெண்களை ‘நிகாஹ்’ செய்ததும் அதன் மூலம்; முஸ்லிம்கள் பெருகியதும் இதற்கெல்லாம் மேலாக ஒப்பீட்டளவில் மியன்மாரின் பூர்வீக புத்திரர்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் சிறந்த வாழ்க்கை வசதியைப் பெற்றிருந்ததும் பேரினவாதிகளின் உள்ளத்தில் நீண்ட காலமாக பொறாமைத்தீயைப் பற்றவைத்தது. இதன்வெளிப்பாடாகவே பல தசாப்தங்களாக முஸ்லிம்களுக்கெதிரான சூட்சுமமான நாசகாரத்திட்டங்களின் அரகேற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
மியன்மாரில் முஸ்லிம்கள் கூட்டங்கூட்டமாக கொல்லப்படுவதும் இளம் பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதும் சொத்துக்கள் கபளிகரம் செய்யப்படுவதும் காலம் காலமாக இடம்பெற்று வந்த போதும் கடந்த ஓரு தசாப்தமே இனஅழிப்பின் சிகரத்தை எட்டியுள்ளது.

இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் வகை தொகை இல்லாது கொலை செய்யப்பட்டனர். பள்ளிவாசல்கள் இடித்துத் தகர்க்கப்பட்டன.முஸ்லிம் பாசாலைகள் யாவும் மூடப்பட்டன.அங்கு வாழும் முஸ்லிம்களால் இஸ்லாத்தை படிப்பதும் போதிப்பதும் ஆகாது.இஸ்லாமிய ஆடைகளை அணிவதற்கு இயலாது. சங்கங்கள் அமைப்பதற்கும் கூட்டம் கூடுவதற்கும் உரிமை இல்லை. பொதுவைத்திய சாலைகளில் சிகிச்சை கிடையாது. ஹஜ்ஜுக்கு யாத்திரை செல்லத் தடை. பெருநாட்கள் கொண்டாட முடியாது. இதெல்லாம் என்ன அல்லாஹ்வை தொழுவதற்கு கூட முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.

கடந்த 2001ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட தீவிர போராட்டத்தின் தொடரில் அதியுச்சத்திற்குச் சென்று 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் தீவிர வாதிகளின் முடிசூட்டுவிழா பிரகடனம் செய்யப்பட்டது போல் முஸ்லிம்களுக்கெதிரான வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திலிருந்து பல்லாயிக்கணக்கான மக்கள் வெட்டியும் கொத்தியும் தீயிட்டு கொளுத்தியும் கொல்லப்படுகின்றனர். கணக்கு வழக்கின்றி பெண்களின் மானங்கள் கயவர் கூட்டங்களினால் துடைத்தெறியப்படுகிறன.கோடி கோடியாய் உடைமைகள் கொள்ளையிடப்படுகின்றன. மாடி வீடுகள் தொட்டு குடிசைகள் வரை வாழிடங்கள் யாவும் தீக்கிரையாக்கப்டு அழிக்கப்படுகின்றன. ( கடந்த சில வாரங்களில் மட்டும் 25 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது)
மியன்மாரில் செயற்பட்ட நடுநிலையான ஊடகங்களின் பணிகள் முடக்கப்பட்டதனால் முஸ்லிம்களது பாதிப்புக்கள் பற்றிய தகவல்கள் வெளியுலகைச் சென்றடைவது தடைப்பட்டுள்ளது.

இதனால் உயிர் பிழைத்தோர் இழப்பதற்கு எதுவுமில்லாத நிலையில் பரம்பரையாக வாழ்ந்த தமது சொந்த வாழிடத்தைவிட்டுவிட்டு அகதி நாமத்தோடு பங்காளதேஷ; முதலான அயல் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அவ்வாறு இடம்பெயரமுடியாதோர் சொந்த நாட்டிலேயே வெட்டவெளிகளில் ஊண் உறக்கமின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இத்தகைய இன ஒழிப்பு வேலைத்திட்டத்தை சரியாக திட்டமிட்டு, மிக நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்பவர்கள் யார். அவர்கள்தான் ‘இனந் தெரியாதவர்கள்’ !

இவ்வளவும் நடந்தபோதும் நடத்தாட்டுகின்றபோதும் மியன்மார் அரசாங்கம் எதுவும் தெரியாததுபோல் நடந்து கொள்கிறது. ஆம். அரசாங்கம் அல்லவா அது அப்படித்தான் நடக்கும்! ஆனால், 1991ஆம் ஆண்டில் சமதானத்திற்கான நோபல் பரிசைப் வென்ற எதிர்க்கட்சி தலைவி ஆங்சாங் சூகி கூட இவ்அக்கிரமம் குறித்து சும்மா ஓர் வார்த்தையைத்தானும் வெளியிடாதது அவரும்கூட அந்த ‘இனந் தெரியாதவர்’ என்பதனாலோ ?

மனித உரிமைகள் அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் தாபனமும் இவ்விடயத்தில் எவ்வித அக்கறையையும் வெளிக்காட்டவில்லை. இந்நிறுவனங்களைப் பொருத்தமட்டில் முஸ்லிம்கள் மீது பெரிதும் கரிசனையற்றவர்கள் என்பது நாம் அறிந்த விடயம்தான். ஆனால், முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம் நிறுவனங்களும் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதன் மர்மம்தான் விளங்கவில்லை.
ஈமானிய இதயங்களே, மியன்மார் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு முதலில் அல்லாஹ்விடம் உளப்பூர்வமாக இறைஞ்சுங்கள.; அதன் பின்பு அகதிகளாக இடம்பெயர்ந்திருப்போருக்காவது இயன்ற அளவு உதவுங்கள். உங்கள் ‘ஹதியா’க்களுக்கு ஒன்றுக்கு பன்மடங்கு நன்மையை குவிப்பதற்கு ரமழான் மாதமும் வந்து வாய்த்திருக்கின்றது. உங்கள் உதவிகளைப் பெற்று உரியவர்களுக்கு வழங்குவதற்காக நம்பிக்கையான முஸ்லிம் நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

அத்தோடு, இம்மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பொறுப்பற்ற முறையில் செயற்படும் மியன்மார் அரசாங்கத்தை நோக்கி சர்வதேச சமூகம் கூரிய பார்வையை செலுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் பெருந்தகைகளே உங்கள் ஆற்றலை மிகக் கவனமாக வெளிப்படுத்துங்கள். அதன் மூலம் மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வாருங்கள்.

திருமண கட்டாய பதிவுச் சட்டம் (This Very Important Articles. Brother and sisters please Share with Others Blogs and Friends)



ஜுலை 07: சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரை மற்றும் மத்திய அரசின் வழி காட்டுதல்படி சென்ற 24 -11 -2009 அன்று தமிழ்நாடு அரசு திருமண கட்டாயப் பதிவு ( 21/2009 ) சட்டததைக் கொண்டு வந்துள்ளது. இது முஸ்லிம்களின் நலன்களைப் பாதிப்பதாகவும் இந்திய அரசமைப்புச் சட்டம் சிருபான்மைனருக்கு வழங்கியுள்ள (Muslim Personnel Law ) முஸ்லிம் தனியார் சட்ட உரிமையில் தலையிடுவதாகவும் உள்ளது. அத்துடன் முஸ்லிம்களைப் பொருத்தவரை இந்தப் பதிவு தேவையில்லாத ஒன்றுமாகும். ஏனெனில்........

திருமணங்களைப் பதிவு செய்யும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே முஸ்லிம் சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மிக நம்பகமான முறையிலும் சந்தேகத்துக்கு இடம்மில்லாத வகையிலும் பதிவு செய்யப்பட்டு அவை பாதுகாத்தும் வைக்கப்படுகிறன. சிலநுறு வருடங்களுக்கு முற்பட்ட பதிவேடுகள் கூட இன்றும் உள்ளன. அல்ஹம்துளில்லாஹ்!

தேவைப்படும் நேரங்களில் மஸ்ஜிதுகள் அல்லது காஜிகள் மூலம் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்கள் போதுமானவையாகவும், அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களாவும் ஏற்றுக்கொள்ளாப்படுகின்றன.

பிற பதிவுகளை விட முஸ்லிம் களின் நடைமுறையில் உள்ள பதிவு முறை பாதுகாப்பானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமாகும். ஏனெனில் மணமகன் அல்லது மணமகள், தான் வசிக்கும் முஹல்லா ஜமாஅத்தின் திருமண அனுமதிச் சீட்டு ( இஜாமீஸத் நாமா) பெறாவிட்டால் அவர்களுக்கு எங்குமே நிகாஹ் செய்து வைக்கப்படுவது இல்லை , நிகாஹ் தஃப்தரே கூட தரப்படுவதில்லை என்பதே உண்மைநிலை, இதன் காரணமாக, திருமணம் நடைபெற்று பதிவு செய்யப்பட்ட பின் கணவன் உயிருடனிருக்கும் நிலையில் அவனுடைய மனைவி வேறு எங்கும் சென்று திருட்டுத்தனமாக நிகாஹ் செய்து கொள்ளமுடியாது. மாறாக ரிஜிஸ்டர் திருமணம் செய்பவர்கள் பல்வேறு இடங்களில் பல திருமனங்கள் செய்து ரிஜிஸ்டரும் செய்கிறார்கள் என்று அடிக்கடி செய்திகள் வெளிவருவதைப் பார்க்கிறோம்.

முஸ்லிம்கள் நடைமுறை படுத்தி வரும் பதிவில் எவ்வித முறைகேடும் குறைபாடும் இல்லை அதே சமயம் கட்டாய திருமணப் பதிவுச்சட்டத்தால் குறிப்பிட்ட பலன் எதுவும் இல்லை. எங்கோ நடக்கின்ற ஒருசில தகாத நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, முஸ்லிம்கள் கட்டாயமாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒரு சில திருட்டங்களோடு இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது கூட ஏற்கத்தக்கதலல். இந்த கட்டாயப் பதிவுச்சட்டம் இந்திய அரசமைப்புச்சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள தனியார் சட்ட உரிமையில் தலையிடுவதும் அந்த உரிமையைப் பறிப்பதுமாகும். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும். எனவே இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இந்தச் சட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகள்:
1. இரண்டு திருமணம் செய்த ஒருவர், இரண்டில் ஒன்றை மட்டும் ரிஜிஸ்டர் செய்து, மற்றதைப் பதிவு செய்யாவிட்டால் இரண்டாவது மனைவி மூலம் பிறக்கும் குழந்தைகள் அவனுடைய வாரிசுகளாக ஆகமுடியாது என்று நிலை ஏற்படும்.

2. ரிஜிஸ்டர் செய்த பின் தலாக் அல்லது குலா ஏற்பட்டாலும் அவர்களை அரசாங்கம் கணவன் மனைவி என்றே கருதும்.

3. செல்லுபடியாகாத (ஃபாஸிதான) நிகாஹ் ஆக இருந்ததால் அதை ஃபஸ்கு செய்வது - முறிப்பது சிரமமாகிவிடும்.

4. ஷாரீஅத் அனுமதித்துள்ள இரண்டாவது அல்லது முன்றாவது அல்லது நான்காவது திருமணங்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்போது பல்வேறு நிபந்தனைகளைச் சேர்க்கும் நிலையை இச்சட்டம் ஏற்படுத்தலாம்.

5. சில காரானங்களைக் காட்டி திருமணத்தைப் பதிவு செய்ய, பதிவாளர் மறுத்தால், முஸ்லிம் கணவன் - மனைவி, அரசின் பார்வையில் திருமணம் ஆகாதவர்களாகவே கருதப்படுவார்கள் அதனால் அவர்களின் குழந்தைகள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

6. இச்சட்டம் ஆலிம்களிடமிருந்தும் ஜமாஅத்துகளிடமிருந்தும் முஸ்லிம்களை ஒதுக்கி வைப்பதற்கான பயங்கரச் சதியாலோசனை போல் தோன்றுகிறது. காலப்போக்கில் முஸ்லிம்கள், மஸ்ஜிதில் நிகாஹ் செய்வது, நிகாஹ் தஃப்தரில் பதிவு செய்வது, ஜமாத்தில் அனுமதி பெறுவது ஆகியவற்றை வீண்வேலை என்று நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

7. ஒவுவொரு ஊர் ஜமாஅத்தும் கப்ருஸ்தானில் இடம் தருவது, நிகாஹ் தஃப்தரில் பதிவு செய்வது, ஆகிய இரண்டு விஷயங்களினால் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன, புதிய கட்டாயப் பதிவுசட்டததை அமல்படுத்தினால், ஜமாஆத்தின் கட்டுப்பாட்டிலிருந்து முஸ்லிம்கள் விலகிவிடும் அபாயம் உள்ளது.

8. (சகோதரிகள் போன்ற) மஹ்ரமானவர்களைத் திருமணம் செய்து ஹராமான வாழ்க்கை நடத்த இச்சட்டம் துணைபுரிவும்.

9. அங்க அடையாலங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் கூறுவதால், கணவன் மனைவி ரிஜிஸ்டர் ஆபீசுக்குச் செல்லாவேண்டிய நிலை ஏற்பட்டு, பர்தா இல்லாத சூழ்நிலையும் குழப்பமும் ஏற்படக்கூடிய அபாயம் உண்டு.

10. தலாக் ஏற்பட்டுவிட்டால், சீர்சாமான்கள், நகைகள் போன்ற பொருட்களை திருப்பிக் கொடுப்பதற்கு வசதியாக, திருமணச் செலவு எத்தனை, நகைகள் எவ்வளவு சீர்சாமான்களின் விலை எவ்வளவு என்பதையெல்லாம் குறிப்பிட வேண்டும் எனக் கூறி அவற்றின் மொத்தத் தொகைக்கு ஏற்ப ரிஜிஸ்டர் கட்டணம் விதிக்கப்படும் நிலையம் வரலாம்.

11. ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு செய்ய ரூபாய் 100.00 தான் கட்டணம் என்றாலும் ரிஜிஸ்டர் செய்வடர்காகச் செய்ய வேண்டிய செலவுகள், 'கவனிக்கவேண்டிய அன்பளிப்புகள்' ஏராளம், ஏராளம். இது ஏழைகளின் இடுப்பை ஒடிக்கும் சுமையாகும்.

12. இது தவிர, பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள், படிப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் பல சான்றிதழ்களை அரசு கேட்கும் சூழ்நிலை ஏற்படலாம். அது மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

13. 18/21 வயதை விடக் குறைந்த வயதுடைய மணமகள் மணமகனுக்குக் கடுமையான சிக்கல் ஏற்படும்.

மேற்கூறப்பட்ட காரணங்களால், நாம் நிகாஹ் தஃபதரில் பதிவு செய்யும் முறையே சிறந்ததும் பாதுகாப்பானதும், சிரமம் இல்லாததும் சரியானதும் போதுமானதுமாகும், இதைவிட்டு விட்டு வேறொருபதிவு தேவையில்லாததாகும். இதுவும் வேண்டும் அரசுப் பதிவும் வேண்டும் என்பது அறிவார்ந்த கருத்துமல்ல.எனவே திருத்தத்துடனோ திருத்தமில்லாமலோ இந்த கட்டாயப் பதிவுச் சட்டம் இஸ்லாமிர்களுக்கு எவ்வகையிலும் பொருந்தாத ஒன்றாகும். ஒன்று இந்தச் சட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும், அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்காவது இதிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என இயன்ற அளவு அரசை வற்புறுத்தவேண்டியது நமது கடமையாகும்.

ஜூலை 09 - 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற.......




ஜுலை 07: இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.

DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.



இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.

இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.

உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய: 
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்குwww.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.


இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:

DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.


ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

மேக்(Mac) கணினிகளுக்கு:

மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Toolடவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.

Source - www.fbi.gov

குறைந்த கால அவகாசமே இருப்பதால் இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து கூடிய விரைவில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
.