Recent Video

Showing posts with label தெரிஞ்சுக்கோங்க. Show all posts

கோபம் ஒரு மனிதனை முட்டாலாக்குமா?



சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்று திருவள்ளுவர் கூறுவார். பொதுவாக, கோபம் எங்கே எல்லாம் சேர்கிறதோ அங்கேயெல்லாம் அழிவு தான். முக்கியமாய் அழிந்து போவது மன நிம்மதி. அதன் பின் கோபத்தால் உந்தப்பட்டு செய்யும் செயல்கள் எல்லாமே மேலும் அதிக அழிவை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கி விட்டே தணியும். இது பொது விதி. ஆனால் கோபம் கூட முறையாகப் பயன்படுத்தப்பட்டால் நல்ல மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது. அது எப்படி என்பதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்.




1943ல் ஒரு நாள் அமெரிக்க கருப்பர் இனத்தலைவரான மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்), டூப்ளின் நகரில் ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு அட்லாண்டாவிற்கு பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அவருடைய ஆசிரியை ஒருத்தியும் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் சில வெள்ளையர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களுக்கு அமர இடம் இல்லாமல் போகவே பஸ் டிரைவர் மார்ட்டின் லூதர் கிங்கையும், அவரது ஆசிரியையும் எழுந்து அந்த வெள்ளையர்களுக்கு உட்கார இருக்கையை விட்டுத் தரச் சொன்னார். மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அது அநியாயமாகவும், அவமானம் தருவதாகவும் இருந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அது அடிக்கடி நடக்கக் கூடிய நிகழ்ச்சி ஆனதால் அவருடைய ஆசிரியை உடனடியாக எழுந்து விட்டார். மார்ட்டின் லூதர் கிங் வேறு வழி இல்லாமல் தயக்கத்துடன் எழுந்தார். அவர் எழத் தாமதமானதால் பஸ் டிரைவர் அவரைக் கடும் வார்த்தைகளால் திட்டினார். அது அவரை மேலும் கோபமூட்டியது. 90 மைல் தூரத்தை அவர் பஸ்ஸில் நின்றபடியே பயணிக்க நேர்ந்தது.




அந்த நிகழ்ச்சியைப் பற்றி தன் சுயசரிதையில் பிறகு எழுதிய போது மார்ட்டின் லூதர் கிங் இப்படி குறிப்பிட்டார். “என் வாழ்வில் நான் மிக அதிக கோபம் கொண்ட நாள் அது. அந்த இரவை என்னால் என்றுமே மறக்க முடியாது”.ஒடுக்கப்படும் கருப்பு இன மக்களுக்காக அவர் குரல் கொடுக்க அந்த நிகழ்ச்சி ஒரு விதையாக அமைந்தது என்றால் அது தவறாகாது.




அந்தக் கோபத்தை அவர் தணித்துக் கொள்ள அவர் பலரும் நாடும் வழிகளை மேற்கொள்ளவில்லை. தானும் கண்டபடி திருப்பி அந்த டிரைவரைத் திட்டவோ,தாக்கவோ முனையவில்லை. ஒரு மத போதகராக வாழ்க்கையை ஆரம்பித்த அவருக்கு அந்த வழிகளில் மனம் செல்லவில்லை. தனிப்பட்ட விதத்தில் அதை எடுத்துக் கொள்ளாமல் கருப்பர்களுக்கு தொடர்ந்து நிகழும் அவமானமாகக் கண்ட அவர் கோபம் அந்த தவறான அநீதியான முறையையே ஒழிக்க வழிகளைத் தேடியது. 1955ல் மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்பு போராட்டத்தைத் தலைமை தாங்கி பெருமளவில் நடத்திய அவர் பல எதிர்ப்புகளைக் கண்டார். அரசாங்கம் சின்ன சின்ன வழக்குகளிலும் அவரை சிக்க வைத்து தடை செய்யப்பார்த்தது. அவருடைய சக கருப்பர் தலைவர்களோ அவரது அறப்போராட்டம் பிடிக்காமல் அவரை எதிர்த்தனர்.




இரண்டு பக்கங்களிலும் எதிர்ப்பு அதிகமாக இருந்தது போதாது என்று வெள்ளைத் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். 1956 ஆம் ஆண்டு அவர் வீட்டிலேயே வெடிகுண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அவரும் அவர் குடும்பத்தினரும் உயிர் தப்பினார்கள் என்றாலும் அவர் கோபம் அதிகரித்தது. கருப்பர்களில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் தலைவராக அவரும் மாறி விடும் படியான மனநிலைக்குத் தானும் வந்து விடுமோ என்று கூட சந்தேகப்பட்டதாக அவர் தன் சுய சரிதையில் சொன்னார்.




ஆனால் அந்தக் கோபத்தையும் தனிப்பட்ட விதத்திலும், தனிப்பட்ட மனிதர்கள் மீதும் எடுத்துக் கொள்ளாமல் அப்போதிருந்த சமூக முறையிலேயே குற்றம் கண்ட அவர் அந்த முறையை சமூகத்திலிருந்து அகற்ற போராட்டத்தில் இறங்கினார். அதில் கடைசியில் வெற்றியும் கண்டார். 1964 ஆம் ஆண்டு சத்தியாகிரக வழியில் அவர் அந்த சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி கண்டதற்காக சமாதான நோபல் பரிசு பெற்றார். 1968 ல் அவர் படுகொலை செய்யப்பட்ட போதும் அவர் தான் எடுத்துக் கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற்றதை வரலாறு இன்றும் பாராட்டுகிறது.





(அவருக்கு சத்தியாகிரக வழியில் வழிகாட்டியாக இருந்தவர் நம் மகாத்மா காந்தி. இதை மார்ட்டின் லூதர் கிங் பல முறை குறிப்பிட்டு உள்ளார். மகாத்மா காந்தியும் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அதில் பயணித்த போது வெள்ளையரான ஒரு ரயில்வே அதிகாரியால் இறக்கி விடப்பட்டது நினைவிருக்கலாம். தன் அறப்போராட்டத்தை தென்னாப்பிரிக்கையில் தொடங்கியதற்கு அந்த நிகழ்ச்சி தான் விதையாக இருந்தது.)




பஸ்ஸில் நின்று கொண்டே பயணிக்க வைத்த டிரைவரை வாயிற்கு வந்தபடி திட்டியோ, இறங்கிய பிறகு கல்லெடுத்து எறிந்தோ, பிறகு எதாவது ஒரு வெள்ளையருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தோ தன் கோபத்தை அவர் தீர்த்துக் கொண்டிருந்தால் தனிமனித கோபத்தைத் தீர்த்துக் கொண்ட ஒரு சராசரி மனிதனின் செய்கையாய் போயிருந்திருக்கும். அமெரிக்க கருப்பர்களுக்கு சம உரிமை கிடைத்த சரித்திரம் உருவாகி இருக்காது.




கோபம் நம்முள் பெரியதொரு சக்தியை உருவாக்க வல்லது. உறுதியாகச் செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்தது. கோபம் இருக்கும் நேரத்தில் செயல்படாமல் இருப்பது தான் மிகவும் கஷ்டம். அப்படிப்பட்ட நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால் அந்தக் கோபமும் நல்ல சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்த உதவும்.







இது பெரும் தலைவர்களுக்குத் தான் முடியும் என்பதல்ல, சாதாரண மனிதர்களுக்கும் முடிந்தது தான். எனக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர். அவருக்கு உதவி செய்து வந்தவருடைய மகன் ஒருமுறை அவரிடம் பலர் முன்னிலையில் “எங்கள் தயவில்லாமல் நீங்கள் இருக்க முடியாது” என்று சொல்லிக் காட்ட அவருக்கு அது ரோஷத்தைக் கிளப்பி விட்டது. ”உங்கள் தயவில்லாமல் உங்களை விட உயர்ந்து காட்டுகிறேன்” என்று சவால் விட்டுச் சென்றவர் பத்து வருடங்களில் அப்படியே சாதித்தும் காட்டினார். அவருக்குள்ளே சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற ஒரு வேகத்தை அந்தக் கோபம் கிளப்பி விட்டது போல இருந்தது. சிறிது காலத்தில் அவர் வாழ்க்கை முறையே மாறிப் போனது.




பல சமயங்களில் கோபம் இது போல் பெரிய உந்து சக்தியாக அமையக்கூடும். பெரிய மாற்றங்களுக்கான பிள்ளையார் சுழியை அது போடக் கூடும். அதனால் அர்த்தமில்லாத கோபங்களை அவ்வப்போதே விட்டுத் தள்ளுங்கள். அர்த்தமுள்ளதாய் கோபம் வரும் போது அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு தீர்வையோ, நல்ல மாற்றத்தையோ உருவாக்க முடிந்தால் கோபமும் நல்லதே அல்லவா?

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...



Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
http://tamilcomputertips.blogspot.com/

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....


SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
http://tamilcomputertips.blogspot.com/

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.http://tamilcomputertips.blogspot.com/

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது. http://tamilcomputertips.blogspot.com/

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.



அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்

facebook உருவான கதை



அன்பு நண்பர்களே
இவை என் பதிப்பு இல்லையென்றாலும்
உங்களுக்கு உதவும் என்பதே என் மகிழ்ச்சி ..
கிழே இருப்பவர் FACEBOOK OWNER - facebook owner mark zuckerberg





ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின்நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு.

அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

2005

காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்றமைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி!

‘மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?’

ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
‘எனக்கு இன்று மனசு சரியில்லை’ என்று ஒரு செய்தியை இதில் போட்டால் போதும்… குறைந்தது 10 நண்பர்களிடம் இருந்தாவது உங்களுக்கு ஆறுதல் செய்திவந்துவிடும். நமது பிறந்த நாளை நாமே மறந்துவிட்டாலும்கூட அதை நினைவில் வைத்திருந்து வாழ்த்து சொல்கிற நண்பர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.
மனிதர்களுக்குப் பணம் மட்டுமே எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடுவதில்லை. ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப் பதில் ‘சமூக மூலதனம்’ எனச் சொல்லப்படுகிற சமூக
உறவுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ள மனிதன், ஒரு பக்கம் அந்த மூலதனத்தை குவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் சமூக மூலதனத்தை இழந்து கொண்டிருக் கிறான். அதை சரி செய்து கொள்வதற்கு அவனுக்குக் கிடைத் துள்ள வாய்ப்பு என் றும் இத்தகைய இணைய தளங்களைச் சொல்லலாம். கூட்டுச் செயல்பாட்டி லிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.
நான் ஃபேஸ்புக்கில் உறுப்பினரானவுடன் தமிழ கத்தைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது பற்றிப் பிரசாரம் ஒன்றை அதன்மூலம் மேற்கொண்டேன். அதற்காக குழு ஒன்றை அதில் அமைத்தேன். சென்னை குப்பங்கள் பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தன்னிட மிருந்த புள்ளிவிவரங்களை அதன்மூலம் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பிரசாரத்தைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதுகுறித்து கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளி யிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து அந்த விஷயத்தை நான் வலியுறுத்தினேன். இன்று அந்தக் கனவுத் திட்டம் நனவாகிவிட்டது.

ஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்துவருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.
இந்தியாவில் கணினிப் பயன்பாடு இன்னும் பெருமள வில் வளர்ச்சி அடையவில்லை என்றபோதிலும் மொபைல் போன்களின் பெருக்கம் ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. இப்போது, சுமார் 30 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2011-ம் ஆண்டின் இறுதியில் 60 கோடி யாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால்கூட சுமார் ஆறு கோடி வந்து விடும். தற்போது உலகெங்கும் உள்ள ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது கணிசமான அளவாக இருக்கும். எல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயிருப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம். இதை உணர்ந் திருப்பதால்தானோ என்னவோ… இந்தியாவைத் தனது முக்கியமான இலக்காக ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்காக ஹைதராபாத்தில் அலுவலகம் ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது. ஆசிய நாடுகளிலேயே சிங்கபூர்க்கு அடுத்து ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்ப தற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் எனநாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது, நம்மு டைய ‘ப்ரைவஸி’ பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும்.அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதான வையாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. ‘அதனால் ஆபத்து… இதனால் தொந்தரவு!’ என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதே புத்திசாலி

உருளைக்கிழங்கை வளர்க்க ஈஸியான வழி இருக்கு...



அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் உருளைக்கிழங்கு மிகவும் பிடித்தது. அத்தகைய காய்கறியை வீட்டில் உள்ள தோட்டத்தில் வளர்த்தால், வீட்டில் சமைக்கும் குழம்பு, கிரேவி, சூப், சாலட், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் ஈஸியாக பயன்படுத்தலாம். இத்தகைய உருளைக்கிழங்கில் பல வகைகள் தற்போதைய மார்கெட்டில் கிடைக்கின்றன. மேலும் அவை மிகவும் அழகான வடிவத்தில், நிறத்தில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சில சமயங்களில் புளுக்கள் புகுந்து, பூச்சிகள் அரித்து, கருப்பாக காணப்படும். இத்தகைய காயை கடைகளில் வாங்குவதை, வீட்டுத் தோட்டத்தில் சரியாக வளர்த்தால், வீட்டிலேயே சூப்பரான உருளைக்கிழங்கை பெறலாம். அதுமட்டுமல்லாமல், உருளைக்கிழங்கை வளர்க்க ஆறு வழிகள் இருக்கின்றன. இப்போது அதில் நல்ல பிரபலமான 2 வழிகளைப் பார்ப்போமா!!!


* இந்த முறை தான் நிறைய உருளைக்கிழங்குகளைப் பெற மிகவும் எளிதான முறை. இவ்வாறு வளர்த்தால், உருளைக்கிழங்கு நன்கு நல்ல வடிவத்தோடு, ஆரோக்கியமானதாக இருக்கும். வீட்டுப் தோட்டத்தில் இருக்கும் மண்ணானது நீரை நன்கு உறிஞ்சி, சற்று வறண்டு காணப்பட்டால், இந்த முறையை பின்பற்றலாம். அதற்கு உருளைக்கிழங்கை வீட்டில் நீண்ட நாட்கள் வைத்து, அது முளைகட்ட விட வேண்டும். அவ்வாறு முளைக்கட்டும் போது, அதனை இரண்டாக வெட்ட வேண்டும். இரண்டாக வெட்டும் போது, இரண்டு துண்டுகளிலும், இரண்டுக்கு மேற்பட்ட கண்கள் இருக்க வேண்டும். இதனால் விரைவில் உருளைக்கிழங்கு வளரும். பின் தோட்டத்தில், ஒரு குறிப்பிட்ட ஆழம், அகலத்தில் தோண்டி, அதில் உரம், பூச்சிக் கொல்லி போட்டு, மற்றும் அந்த உருளைக்கிழங்கையும் வைத்து மூட வேண்டும். பின் அந்த கண்களில் இருந்து செடி வளர்ந்து, அதன் இலைகள் ப்ரௌன் நிறத்தில் மாறும் போது, அதனை அறுவடை செய்ய வேண்டும்.



* இது மற்றொரு வகையான பொதுவாக முறையாகும். இதற்கு முளைக்கட்டிய உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டவும். முக்கியமாக ஒவ்வொரு துண்டிலும், இரண்டுக்கு மேற்பட்ட கண்கள் இருக்க வேண்டும். இப்போது அதனை ஒரு காகிதத்தில் மடித்து, 24 மணிநேரம், லேசான ஈரப்பதமான இடத்தில் வைக்க வேண்டும். இதனால் தண்டுகள் ஈஸியாக வளர்ந்துவிடும். பின் அந்த காகிதத்தில் மக்கிய இலைகளைப் போட்டு, நன்கு மூடி, தரையில் 4 இன்ச் வரை குழிதோண்டி, அதனை வைத்து, ஒரு சிறு ஓட்டையை போட்டு, தரையில் வைத்து, மண்ணால் மூடி, தண்ணீர் ஊற்றி வரவும். எப்போது அது வளர்ந்து, அதன் இலைகள் ப்ரௌன் நிறத்தில் மாறி வருகிறதோ, அப்போது அதனை வெளியே எடுத்து வைத்து, 24 மணிநேரம் அதனை நீரில் தேய்ககாமல், அதில் உள்ள மண்ணை மட்டும் நீக்கிவிட்டு, பின் பயன்படுத்த வேண்டும்.

மேற்கூறியவாறு செய்தால், உருளைக்கிழங்கு நன்கு வேகமாக வளரும். ஆமா, நீங்கள் எப்படி வளர்க்குறீங்க...

மனிதனின் உடல் ஒரு அதிசயம்


மனிதனின் உடல், அதிசயங்கள் நிறைந்தது. ஒரு வருடத்தில் நமது கல்லீரல் 23 பால் லாரிகளில் நிரப்பக்கூடிய அளவுக்கு இரத்தத்தை வடிகட்டுகிறது. உடலில் கனமான உறுப்பு மூளைதான். இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ ஆக
ும். மனித உடலில் 60 சதவீதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும்.

இதயம் 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் இரத்தத்தை 1.68 கோடிமைல் நீள இரத்தக் குழாகளின் வழியே பரவச் செய்கிற
து. இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடையுள்ள பொருளை பூமியில் இருந்து 1 அடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.

மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் வளர்ச்சியையும் பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. ஒரு மனிதன் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்று விடுகிறான். 40 வயதிற்கு மேல் வளர்ச்சி நின்று விடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். இது குறுத் தெலும்புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது.

நாம் பகலை விட இரவில் தான் அதிக அளவில் வளர்கிறோம். குழந்தைகள் கோடைக்காலத்தில் மழைக் காலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்போது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது உறங்கும்போது கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.

வளர்ச்சியடைந்த ஆண் ஓய்வாக இருக்கும் போது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது இது 200 வரை உயரும். நாடி துடிப்பு அன்பது இதயத்தின் துடிப்பையே குறிக்கும். மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும்.

ஒவ்வொரு இரவிலும் தூங்கும் போது உடலசுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சியடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கிவிடும்.உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும்போது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். கருத்த முடி உடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உதடு, உள்ளங்கை, உள்ளங்கால், விரல்களின் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.

குழந்தை பிறக்கும் போது 300 எலும்புகள் இருக்கும். இவற்றுள் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லைவிட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவுள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும். அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எடுக்கணும்...


"அரசுப் பள்ளி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் பள்ளியாக இருந்து வருகிறது..." - கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக விசிட் அடித்த போது இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.



 கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், ஜடையம் பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த பள்ளி இயங்கி வருகிறது.  இந்த ஆரம்ப பள்ளி 1930 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இராமபாளையம் மட்டுமில்லாமல் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த  34 குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.  இந்த பள்ளியானது ஒரு தரம் வாய்ந்த ஆங்கில பள்ளிக்கு இணையாக இருக்கிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற இயல்பான கிராம சூழல், போதுமான கட்டிட அமைப்பு, நவீன பளிங்கு கல்லால் ஆன மாதிரி வகுப்பறைகள்.  இன்றைய வாழ்க்கைக்கு தேவையான அவசியமான கணினி பயிற்சி வகுப்புகள்.  குழந்தைகள் குழுவாக அமர்ந்து உரையாட வட்ட மேஜை வசதிகள்.  குழந்தைகள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள ஆங்கில, தமிழ் நாளிதழின் தினசரி வாசிப்புகள்.  மாணவ மாணவியரை பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள், வண்ண சீருடைகள், கழுத்தணி அடையாள அட்டை என எதை எடுத்தாலும் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் வியப்பான சங்கதிகளே !
நூலகத்தில் ஆரம்ப பள்ளி கல்வியிலிருந்தே கற்ற நவீன மின்னணு வசதியுடன் கூடிய நூலக வசதி, கணினி தொலைக்காட்சி, அறிவியல் ஆய்வு உபகரணங்கள், செய்வழி கற்றல், அட்டைகளை சிறப்பாக வைக்க வடிவமைக்கப்பட்ட பலகைகள் என பார்த்தாலே பரவசமூட்டுகிறது.

இப்பள்ளியில் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர், குடிநீர், காற்று, மாசுக்களை தடுத்து குழந்தை நோயிலிருந்து காக்கும் பொருட்டு தடுப்பு கண்ணாடி ஜன்னல்கள்.  இந்தபள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான சூழலில், சிறந்த கல்வியினை கற்கின்றனர்.  விரும்பி வந்தும் சேருகிறார்கள்.  சென்ற ஆண்டு மெட்ரிக் பள்ளியிலிருந்து 4 குழந்தைகள் இந்தப் பள்ளிக்கு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    
குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கல்வியினை வரமாய், தவமாய் போதித்து கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் பள்ளி சிறந்து வளர்ச்சியடைய பொதுமக்கள் தாராளமாய் நன்கொடைகளை அளித்து வருகிறார்கள்.  அந்த நன்கொடைகளை ஆசிரியர்கள் சரியாய் பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்த பள்ளியின் ஆசிரியர் கூறும்போது "தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி இது மட்டுமே என்று சொல்லலாம் சார்.  தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு அரசுப் பள்ளியும் பிறர் உதவியை நம்பாமல் மக்கள் உதவியை மட்டுமே நம்பினால் சிறப்பாய் வளரும்" என்கிறார்.

னியார் பள்ளிகளை நோக்கி ஓடும் பெற்றோர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். நம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளையும் இது போன்று தத்தெடுத்து மேம்படுத்தினால் எல்லா அரசு பள்ளிகளும் இந்த பள்ளி போன்று சிறப்புடன் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தனியார் பள்ளிகளுக்கு வாரி வழங்கும் பணத்தில் பாதியையாவது இது போன்ற அரசு பள்ளிகளுக்கு கொடுத்து அந்த பள்ளிகளில் கவனம் செலுத்தினோமால் அரசு பள்ளி தனியார் பள்ளியை விட பல மடங்கு மேம்பட்டதாக விளங்கும்...

பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு!!


பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை, தற்போது சிறியவர்கள்
 முதல் பெரியவர்கள் என அனைவரும் உபயோகப்படுத்துகின்றனர்.
இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம்.
 இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள் :

இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். 
Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் 
வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின்
புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள்.
 இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு
 மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான 
ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள்.

யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த திகதியினையும், அவர்களது 
நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான 
நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம்.
 காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.

அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள். 
உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். 
ஆனால் போலி நபர்களின் Profile கள் முழுமையாக நிரப்பப்படாமலும், ஏனோதானோ 
என நிரப்பப்பட்டும் இருக்கும்.

போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள்.
 உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது. 
ஆண்களுக்கு!… பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக 
ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள், தானாக முன்வந்து முகம் 
தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.

போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். 
அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.



There are millions of profiles on the Facebook. 

Beware of your fake Facebook friends and never assume that all your friends are real people, because 
they may be liars, predators, crooks and thieves who create false profiles by using stolen pictures and identities
 of other people. Eliminate anyone from your friend list, whom you suspect a fake;it could be an issue of life 
and death for you or someone else in your network. For identifying a fake profile, there is not any official method,
but you may check it by some simple ideas. Some funny and useful tips are given below to identify a fake profile.
Naturally a lot of evil characters exist, who create the fake profiles to achieve their goals. If anyone creates a fake celebrity
account on twitter then it will be easily identified as a fake account but on Facebook, it is not easy to identify.
Those fake profile holders attack innocent people by use of social tactics. For staying safe and surviving in the huge social network,
it’s very important to smear fake Facebook profiles.
Profile Photo: Fake profiles mostly use doubtful pictures such as a hot guy having six packs or a very beautiful girl or 
a very hot and sexy picture of a girl.
Every perfect picture creates doubt because no one in this world is perfect, therefore check every profile 

carefully that has a model photo as the profile picture.
Never trust anyone who fulfills a fantasy. The profile having only one profile picture which is pornographic, seems to be fake.

மருத்துவம் தொழிலா ..? சேவையா ...?





ஜனத்தொகை பெருகி வரும் இந்தஉலகில் , புதிய புதிய நோய்களும்பெருகி கொண்டு தான்இருக்கின்றன. அது மாத்திரமல்லமருத்துவர்களும் பெருகி கொண்டேஇருக்கிறார்கள். உலக சுகாதாரஅமைப்பின் கருத்துப்படிஇந்தியாவில் கிட்டதட்ட 4 . 4 லட்சம்மருத்துவர்கள் உள்ளனர் . கிட்டத்தட்ட 273 மருத்துவகல்லூரிகளின் மூலம் 32000 மருத்துவ மாணவர்கள் மருத்துவம்படிக்கின்றனர். ஏழை வீட்டில் பிறந்தநன்கு படிக்கும் மாணவன்முதற்கொண்டு பல லட்சங்களைபணமாக கட்டி படிக்கும் மாணவன்என மருத்துவ மாணவர்களை வகைபிரிக்கலாம்.

இவை எல்லாம் ஒரு பக்கம் ஒரு நிம்மதியை கொடுத்தாலும்பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவத்தை சேவையாகநினைகின்றனரா அல்லது தொழிலாக செய்கின்றனரா என்பது தான்நம்மை போன்ற பொது ஜனத்தின் சந்தேகம். நேற்று நான் சந்தித்தஒரு சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தபடியால் இந்த பதிவைஎழுத வேண்டிய கட்டயதிற்குள் வந்து விட்டேன். ஒரு 60 வயதுதாயார் ஒருவர் நெஞ்சு வலியின் காரணமாக ஒரு மருத்துவமனைக்குசிகிச்சை பெற வந்திருந்தார். மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அந்த தருணத்தில் நிலைமை மருத்துவருக்குஅறிவிக்கப்பட்ட பிறகும் , தன்னை நாடி வந்திருந்த மருந்து விற்பனைபிரதிநிதிக்கு சமயம் கொடுத்து தங்கள் வியாபாரத்தை பேச ஆரம்பித்துவிட்டார். வேறென்ன சொல்லுவது. நெடு நேரம் காத்திருந்த அந்தமுதியவர் வேறு மருத்துவமனையை நாடி சென்றது தான் கொடுமை.


என்ன நினைக்கிறார்கள் இந்த மருத்துவர்கள். பல லட்சம்செலவழித்து மருத்துவம் படித்தால் பணத்தை குறித்து அக்கறைவராமல் வேறென்ன வரும் என்கிறார் இந்த பொது ஜனம். நாமும்வேறென்ன சொல்லுவது . நோயாளிகளிடம் காண்பிக்கும்அக்கறையை விட மருந்து விற்பனை பிரதிநிதிக்கு கொடுக்கும்முக்கியத்திற்கு வேறென்ன காரணம் இறக்க முடியும்...? தரம்குறைந்த மருந்துகளை பரிந்துரைக்க அவர்களுக்கு கிடைக்கும் அற்பபணத்திற்காகவும் வெகுமதிக்காகவும் அல்லாமல் வேறெதற்கு? சுகாதாரத்தை பேண வேண்டிய மருத்துவமனைகள் சிலவற்றில்நுழைந்தவுடன் ஏற்படும் வாசனை (?) சகிக்கமுடியாது. ஏன் அதை கூடசரி பண்ண மருத்துவர்களுக்கு சமயம் கிடைக்கவில்லை போலும். என்ன சொல்லுவது ... என்னவோ யாதோ என பயந்து வரும்நோயாளிகளை பார்த்து ஒரு புன்முறுவல் கூட செய்யாமல் தங்கள்மேதாவித்தனத்தை காட்டும் மருத்துவர்களும் உண்டு.....


ஆனாலும் எல்லா மருத்துவர்களும் அப்படி என்று சொல்ல முடியாது. கடுமையான விபத்தில் சிக்கி கால்கள் ஒடிந்த நிலையில் ஒருவாலிபன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது , ஒருமருத்துவர் கையில் அணிவதற்கு கையுறை தேடி கொண்டிருக்க, தற்செயலாய் அந்த பக்கம் வந்த இன்னொரு மருத்துவர் தான் நல்லஆடைகளை அணிந்துருந்தும் அதை பொருப்படுத்தாது ஓடி சென்றுதனது கைகளினால் அந்த கால்களை தாங்கி பிடித்த காட்சியையும்கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். வெறும் 25 ருபாய் , 50 ருபாய் மாத்திரம்பீஸ் வாங்கும் மருத்துவர்கள் 80 கிமீ பிரயாணம் செய்து வந்துமருத்துவம் பார்ப்பதையும் அறிந்திருக்கிறேன்.


ஆனால் கடவுளுக்கு அடுத்தபடியாக போது ஜனம் இவர்களைநினைத்திருக்க , மருத்துவம் என்ற புனிதமான சேவை வியாபாரம்ஆகும் கொடுமை தீர்ந்தால் தான் உண்மையான சேவை செய்யும்மருத்துவர்கள் கூட மதிக்கப்படும் நிலை வந்திருக்கிறது என்றால் , அது கூட மறுக்க முடியாது என்றே நினைக்கிறன்

எந்த இடத்துல ரயில் வருது.. மொபைலிலேயே தெரிந்துகொள்ளலாம்!

ரயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை மொபைலிலேயே தெரிந்து கொள்ள புதிய வசதியை ஐஐடி கான்பூர் உருவாக்கியுள்ளது.
சரியான நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டும் என்றாலே டென்ஷன் தான். அதிலும் ரயில் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் ரயில் நிலையத்தில் பயணிகளிடத்தில் பெரிய பரபரப்பே ஏற்பட்டுவிடுகின்றது.
இனி மேல் இந்த பரபரப்பு தேவையில்லை என்று சொல்லுவது போல புதிய தொழில் நுட்ப வசதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ரயிலின் நம்பரை மொபைலில் டைப் செய்து, 09415139139 அல்லது 09664139139 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்தால் போதும், ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதியை பெற ரயிலில் ஒரு ரிசீவரை பொருத்த வேண்டி இருக்கிறது. ஒரு ரயிலில் இந்த ரிசீவரை பொருத்த ரூ. 50,000 வரை ஆகிறது. இந்த வசதியை கிட்டத்தட்ட ரயில் ட்ராக்கர் என்று கூட சொல்லலாம். இந்த ப்ராஜெக்டிற்கு 121 கோடி செலவளித்திருக்கிறது ரயில்வே துறை.
ரயில் வரும் இடத்தினை கண்டறியும் இந்த புதிய வசதி ராஜதானி, சாதாப்தி, டியூரன்டோ போன்ற அதி வேக ரயில்களில் மட்டும் இப்போதைக்கு வழங்கப்பட இருக்கிறது. இன்னும் 18 மாதத்தில் இந்த ட்ரெயில் ட்ராக்கர் வசதி எல்லா ரயில்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
இதை வைத்து பார்க்கும் போது 2013-ஆம் ஆண்டில் இந்த வசதி அனைத்து ரயில்களிலும் வழங்கப்படும்.ரயில்வே துறை இந்த வசதியினை ரயில்களில் வழங்க இஸ்ரோவிடம் அனுமதியும் வாங்கி உள்ளது.
ரயில் வரும் இடத்தினை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிரோம் என்று கூட பலருக்கு தோன்றலாம். சில சமயங்களில் சின்ன சின்ன அவசரங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
சில சமயங்களில் வேறு ஏதேனும் முக்கிய விஷயங்களை, ஒரு ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டு வர வேண்டி இருக்கும். அல்லது ஏதாவது பொருட்கள் ரயில் நிலையத்திற்குள்ளேயே வாங்கி வர வேண்டியது இருக்கும். ஆனால் ரயில் அதற்குள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று காத்து கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
ஆனால் ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால், தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்த சவுகரியத்தினை இந்த ட்ரெயின் ட்ராக்கர் வசதியின் மூலம் பெறலாம். ரயில் பயணிகளுக்கு இந்த வசதி முக்கியமான ஒன்று தான்.

தெரிஞ்சுக்கோங்க-(Maths Tricks)



        ******ப்பூ ...இவ்ளோதானா..!******

                 


(ரமேஷ் ): டேய்..சுரேஷ்..மேத்ஷ்(Maths) எக்ஸாம் எப்டி எழுதியிருக்க?


(சுரேஷ்) : எல்லா சம்சும் கம்ப்ளீட் பண்ணனும்னு நெனைச்சேன்.
                    பட் நிறைய ஸ்டெப்சு இருந்ததால முடியல..


(ரமேஷ் ): ஆமாண்டா.. நம்ம அப்பாக்களெல்லாம் சின்ன சின்ன 
                  கால்குலேஷன் (Calculation) போடறதுக்கு கூட   
                  கால்குலேட்டரை   அல்லது கம்ப்யூட்டர்ல 
                   இருக்கற கால்குலேட்டரை யூஸ்  பண்ணறாங்க.. 


 (சுரேஷ்) : ம்ம் .. ஸ்கூல்ல நமக்கும் பர்மிஷன் கொடுத்தா நல்லா
                    இருக்கும்...


(ரமேஷ் ): கவலைப் படாதடா...அதுக்குப் பதிலா 
                  மல்ட்டிப்ளிக்கேஷன் (Multiplication) பண்றதுக்கு ஷார்ட் கட் 
                 மெதெட்ஸ் நிறைய இருக்குடா..எங்க மாமா சொல்லிக் 
                  கொடுத்தாரு..ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்டா...



(சுரேஷ்) :  அப்படியா..ப்ளீஸ் சொல்லுடா..






(ரமேஷ் ): இப்ப இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டிஜிட்ஸ்(Digits)
                   நம்பர்ஸ்-ஐ Multiplication பண்றதை பார்க்கலாம்.


For example, 23 x 41 = 943 இந்த Multiplication-ஐ  ஷார்ட் கட் மெதெட்ஸ்-ல ஈசியா போடலாம்.


To multiply two numbers (of two or more digits), split each number into two parts. If the first number is a1 + b1 and the second number is a2 + b2, then the product of the two numbers is:

                      (a1 x a2) + (a1 x b2 + b1 x a2) + (b1 x b2) 
    

The solution comprises three parts (as shown by the boxes and arrows above): the head, the middle, and the tail.


   1. The digits on the right are multiplied vertically to get the tail part: b1 x b2 
     (excess carried over)
   2. All digits are multiplied crosswise and added together to get the middle part:

       a1 x b2 + b1 x a2 (excess carried over)
   3. The digits on the left are multiplied vertically to get the head part: a1 x a2



In our example 23 x 41  = 943,

Consider       2 as a1
             3 as b1
             4 as a2 &
             1 as b2
The steps are:


   1. 3 x 1 = 3
   2. 2 x 1 + 3 x 4 = 14, put down 4 and carry over 1
   3. 2 x 4 = 8, plus the 1 carried over, is 9


இப்ப இரண்டுக்கு மேற்பட்ட டிஜிட்ஸ்(Digits) நம்பர்ஸ்-ஐ Multiplication பண்றதை பார்க்கலாம்.


Example (2) : 108 x 64 = 6912

                           

The steps are:


   1. 8 x 4 = 32, put down 2 and carry over 3
   2. 10 x 4 + 8 x 6 = 88, plus the 3 carried over, is 91; put down 1 and carry
        over 9
   3. 10 x 6 = 60, plus the 9 carried over, is 69





(சுரேஷ்) : very useful-டா. இன்னும் வேற Techniques இருக்காடா?


(ரமேஷ் ): ம்ம்..சொல்றேன் ...இப்ப "5'-ல் முடியும் 2 digits Numbers -ஐ
                    Multiply பண்றதை பார்க்கலாம்.


For example, 25 x 25 = 625,
   Now Consider
       Before "X" symbol Nos
              2 as a1
              5 as b1
       After X" symbol Nos
              2 as a2
              5 as b2
      
       now use formula,
          i) b1 X b2 (i.e) 5 X 5 = 25


         (ii) a1 X (a2+1) (i.e) 2 X 3 = 6
         Now Put first result at right side
          second result at left side.
         we got, 25 X 25 = 625
Example(2):
                   65 x 65 = 1225
Before "X" symbol Nos
              6 as a1
              5 as b1
       After "X" symbol Nos
              6 as a2
              5 as b2
      
       now use formula,
          i) b1 X b2 (i.e) 5 X 5 = 25
         (ii) a1 X (a2+1) (i.e) 6 X 7 = 42
         Now Put first result at right side
                second result at left side
         we got, 65 x 65 = 4225


      
         (சுரேஷ்) :   ரொம்ப தேங்க்ஸ்டா..இன்னும் நிறைய Short cuts சொல்லிக் கொடுடா..


(ரமேஷ் ):    ஷ்யூர் டா...ஏன்னா நீ என் நண்பேண்டா...!
.